விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் தற்போது தனத்தால் பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. மீனா குழந்தையுடன் வீட்டிற்கு வந்ததிலிருந்து, தனம் வீட்டில்லாததை அறிந்து கோபமடைகிறார். இன்றைய எபிசோடில் தன் குழந்தையின் ஓயாத அழுகையால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். மேலும், தனத்தின் செய்கையாலும் ஆத்திரமடைகிறார்.
பாண்டியன் ஸ்டோர் :
நேற்றைய எபிசோடில் மீனாவின் குழந்தையை ஜீவாவின் அம்மா பாண்டியம்மா என்று சொல்லி அழைக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மீனா தன் குழந்தையை யாரும் பாண்டியம்மா என்று அழைக்கக்கூடாது எனவும் அது தனக்கு பிடிக்கவில்லை எனவும் கூறி குழந்தையை வாங்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு செல்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் ஜீவாவின் அம்மா மனவேதனை அடைகிறார். முல்லை அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார். மேலும், தான் ஒரு ஆண்குழந்தையை பெற்று தருவதாகவும் அதற்கு தன் மாமனாரின் பெயரை வைத்து அழைக்குமாறும் சொல்கிறார் முல்லை. மீனாவின் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது.
முல்லை அந்த இடத்திற்கு வர அவரும் குழந்தையை சமாதானம் செய்கிறார். அப்போது மீனா முல்லை பற்றி தான் நல்லவிதமாக நினைத்ததையும், தனத்தின் செயலால் கோபமடைவதையும், முல்லையிடம் சொல்கிறார். அப்பொழுதும் முல்லை மீனாவை சமாதானம் தான் செய்கிறார். குழந்தையின் அழுகுரல் ஓயாத காரணத்தினால் ஜீவாவின் அம்மா ஒரு நாட்டுவைத்தியத்தை சொல்கிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஆனால் மீனாவிற்கு இதில் உடன்பாடில்லை. டாக்டரிடம் கேட்க வேண்டும் என்று டாக்டருக்கு போன் பண்ணுகிறார். அவர் எடுக்கவில்லை. குழந்தை மோஷன் போகாதது தான் பிரச்சனை என அறிகிறார் ஜீவாவின் அம்மா. உடனே அதற்கான மருந்தை செய்யச் சொல்கிறார். இதற்கிடையே, குழந்தைக்கு லூசுமோஷன் போகிறது.
இதனால் ரொம்ப பயந்த மீனா, ஜீவாவிற்கு போன் பண்ணுகிறார், அவர் எடுக்காத காரணத்தினால் மீனாவின் அம்மா கலைக்கு சில பண்ணுகிறார். குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததையும், வீட்டில் நடந்த செயல்களையும் சொல்லி அழுகிறார் மீனா. இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைகிறது.