பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருக்கும் விஷயம் அனைவர்க்கும் தெரிய வந்ததும் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இன்றைய எபிசோடு முழுக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் முழுக்க கலகலப்பாகவே காட்டப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கற்பமானத்தில் இருந்து எப்பொழுது குடும்பத்தினருடன் சொல்ல போகிறார் என அனைவரும் ஆவலுடன் இருந்தனர். ஜீவா வீட்டை விட்டு வெளியேறியதால் நடந்த பிரச்சனையில் மூர்த்தி உண்மையை சொல்லி விடுகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷத்தில் உள்ளது.
இத்தனை நாட்கள் தனத்திற்கு குழந்தை பிறக்காது என்று ஏளனமாக பேசியவர்களுக்கு எல்லாம் தனம் கர்ப்பமான விஷயத்தை தெரிந்து வாயடைத்து தான் போயுள்ளனர். மீனாவும் தான் செய்த தப்பை உணர்ந்து வீட்டிற்கு வந்து தனத்திடம் மன்னிப்பும் கேட்கிறார். இப்படி அனைத்து குடும்பமே சந்தோசமாக உள்ளது.
முல்லை தனத்தின் அம்மாவை அழைத்து வர தனத்திற்கு அமம்வி பார்த்ததும் சந்தோஷமாகிறது. தனத்தின் அம்மாவும் என்ன ஆச்சு என்று கேட்க கர்ப்பமான விஷயத்தை கேட்டதும் அதிர்ச்சியாகிறார். தனத்தை கட்டிப்பிடித்து அழுகிறார். இத்தனை நாள் சாமி கும்பிட்டது வீண் போகவில்லை என்று கதறி அழுகிறார்.
கஸ்தூரி ஜெகாவிடம் தனம் கர்ப்பமாக இருக்கும் விஷயதாகி சொன்னதும் அவருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆனந்த கண்ணீர் விடுகிறார். இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்தது. மேலும் மீனா அவரின் அம்மாவிற்கு கால் செய்து இங்கு வரும்படி கூறுகிறார். ஆனால் கலை நீ இந்த வீட்டிற்கு வா என்று அழைத்ததும் மீனா திட்டி விடுகிறார்.
கண்டிப்பாக நீயும் அப்பாவும் இங்க வந்தே ஆகணும் என்று சொல்லி போனை வைக்கிறார். கலை ஜனார்தனனிடம் போய் சொல்ல அதெல்லாம் என்னால வர முடியாது. நீயும் உன் பொண்ணும் பச்சோந்தி மாறி மாறுவீங்க அதுக்கு நான் ஆளு கிடையாது என்று திட்டுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.