தற்போது கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தற்போது சீனா அரசுக்கு சொந்தமான சினோபார்ம் நிறுவனம் கொரோனாவிற்கான இரண்டாவது தடுப்பூசியை கண்டுபிடித்து அசத்தியுள்ளது.
கொரோனா:
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா என்னும் வைரஸ் பரவியது. இந்த வைரஸ் சுமார் 20 உலக நாடுகளில் பரவி அனைவரையும் துன்புறுத்தி வருகின்றது. தற்போது கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் ஆர்வமாக செயல் பட்டு வருகின்றன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் ரஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளளது. மேலும் சீனாவில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஃபாஸ்டேக் இல்லையென்றால் இருமடங்கு கட்டணம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!
சீன அரசின் சொந்தமான சினோபார்ம் நிறுவனம் இரண்டு குழுக்களாக பிரிந்து கொரோனவிற்கான 2 தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது. தலை நகரான பில்ஜிங்கில் உள்ள ஒரு குழு கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி 8 சதவீதம் செயல்திறன் பெற்றுள்ளது என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்துவதற்காக ஐக்கிய அரபு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சினோபார்ம் நிருவனத்தின் யூகான் நகர குழு மற்றொரு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி 79.3 சதவீதம் செயல்திறன் கொண்டது என்று சினோபார்ம் நிறுவனம் அறிவித்துள்ள்ளது.