பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் டாக்டர் தனத்திடம் உடனே ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுக்கணும். அதன் பின் கேன்சர் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கணும் என்று சொல்கிறார். அப்போது தனம் குழந்தை பிறந்த பிறகு நா பால் கொடுக்க முடியுமா என கேட்க டாக்டர் முடியாது என்று சொல்கிறார். இதை கேட்டு தனம் அதிர்ச்சியாக, மீனா அவரை சமாதானப்படுத்துகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பின் இருவரும் கோவிலுக்கு வருகின்றனர். அப்போது மீனா உங்களுக்கு ஏன் இப்படி ஒரு பிரச்சனை வரணும் என வருத்தப்பட, தனம் சமாதானப்படுத்துகிறார். அடுத்ததாக மீனா இந்த விஷயத்தை உடனே வீட்டில் சொல்லி ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கலாம் என்று சொல்ல, தனம் எனக்கு கொஞ்சம் டைம் வேணும். அதுவரைக்கும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல கூடாது என சத்தியம் வாங்குகிறார்.
அடுத்ததாக இருவரும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது முல்லை, ஐஸ்வர்யா பேசிக் கொண்டிருக்கின்றனர். பின் ஐஸ்வர்யா தனத்திடம் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என்று சொல்ல தலை வலிக்குது என்று சொல்லி மழுப்புகிறார். தனம், மீனா நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து முல்லை, ஐஸ்வர்யா சந்தேகப்படுகின்றனர். அப்போது மீனா இந்த விஷயத்தை மறைக்கிறது சரி இல்லக்கா. உடனே வீட்டில் சொல்லிடலாம் என்று கேட்க தனம் வேண்டாம் என்று சொல்கிறார்.
பின் மீனாவிடம், முல்லை நீங்க ஏதோ மறைக்கிறீங்க. என்ன பிரச்சனை, நீங்க நடந்துக்குற விதமே சரியில்ல என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். ஒரு கட்டத்தில் மீனா சமாளிக்க முடியாமல் ஹாஸ்பிட்டல் போனோம் என்று சொல்ல முல்லை, ஐஸ்வர்யா அதிர்ச்சியாகின்றனர். பின் நார்மல் செக்அப் தான் போனோம், ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லிவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.