தீபாவளி, பொங்கல், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது பிற ஊர்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுப்பது வழக்கம். இதனால் பண்டிகை நாட்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக ரயில், போக்குவரத்து நிர்வாகம் பல்வேறு சிறப்பு பேருந்து, ரயில்களை அறிவிப்பது வழக்கம்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் பொதுமக்கள் அனைவரும் மூன்று தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு படையெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இதனால் அந்த நேரத்தில் பயணிகள் அவதியுராமல் இருக்க ரயில்வே நிர்வாகம் இப்போதே தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி வரும் ஜூலை 12ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என அறிவித்துள்ளனர். இதனால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் கடைசி நேரத்தில் அவதியுறாமல் இருக்க இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.