விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இன்பம், துன்பம் என பல காட்சிகள் கலந்த ஒரு கூட்டு குடும்பத்தை காட்டுவதால் அனைவரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது. இப்பொழுது நிஜ வாழ்க்கையிலும் குழந்தை பெற்றுள்ள மீனா இது வரையிலும் வீடியோ கால் மூலம் நடித்து வந்தார். தற்போது நேரடியாக கலந்துகொள்ள உள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்ந்து பல கவலையான சீன்கள் ஒளிபரப்பாகின. மேலும் பல சண்டைகள் கருத்து வேறுபாடுகள் என ரசிகர்களும் கவலைப்படும் அளவிற்கு இருந்தது. மேலும் இதுவரையிலும் எந்த கேட்ட பழக்கமும் இல்லாத சத்திய மூர்த்தி வீட்டில் உள்ள கவலையால் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்.
இவ்வாறு பல சம்பவங்கள் நடந்தேறினர். இந்நிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளும் சரியாகி ஒரு தற்போது மறுபடியும் வீட்டில் சந்தோசங்கள் தாண்டவம் ஆடி வருகின்றன. மேலும்’ கதிர் முல்லைக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்களும் உண்டு.
அவர்களுக்கு எப்பொழுது ரொமான்ஸ் வரும் என்றும் மக்கள் காத்துக்கொண்டுள்ளனர். மேலும் நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக இருந்த மீனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் சிறிய காலத்திற்கு சீரியலுக்கு பிரேக் விடுவார் என்று பார்த்தல் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் வீடியோ கால் மூலம் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் மீனா.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆரம்பகட்டத்தில் மீனா கதாபாத்திரத்திற்கு மக்கள் பல எதிர்ப்புகளை தெரிவித்தாலும் நாளடைவில் மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது மறுபடியும் மீனா பழைய மாதிரி நேரடியாகவே ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார். இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.