பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா ரவுடி பேபி கெட்டப்பில் ஆட்டோ டிரைவர் போல உடை அணிந்து கொண்டு ஆட்டோ மீது கைவைத்தபடி கண்ணன் அருகில் உள்ளார்.
மளிகை கடை நடத்துவதை பிரதான தொழிலாக கொண்ட ஒரு நடுத்தர கூட்டு குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை நகர்கிறது. மேலும் இந்த கதையில் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட கண்ணன் என்ற கடைசி தம்பியின் ரகசிய திருமணத்தால் குடும்பத்தின் சந்தோஷம் சீர்குலைகிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பழைய நிம்மதி மற்றும் சந்தோஷத்தை இழந்து களையிழந்து இருக்கிறது.
மேலும் படிப்பை பாதியில் கைவிட்டு திருமணம் செய்து கொண்டதால் வாழ வழி தெரியாமல் இருக்கும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு யாராவது ஒருவர் மூலமாக தன்னால் முடிந்ததை பொருளாகவோ, பணமாகவோ கொடுத்து கண்ணனின் குடும்பம் செய்து வருகின்றது. எனினும் குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகிறார் கண்ணன். இவ்வாறாக அந்த சீரியலின் கதை நகர்கிறது.
இந்நிலையில் அந்த சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சமூகவலைத்தள பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டான ஒன்று. அதிலும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக ரெஸ்பான்ஸ் பெற்ற ஒன்றாகும்.
அந்த வகையில் தற்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ஒரு புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அதாவது அந்த புகைப்படத்தில் ஆட்டோ டிரைவர் உடையில் கண்ணன் பக்கத்தில் இருக்க ஆட்டோ மீது கைவைத்த படி உள்ளார் ஐஸ்வர்யா. இந்த புகைப்படம் பார்க்கும் ரசிகர்கள், இதை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உடன் ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்