‘அண்ணி தயவு செஞ்சு என் கூட பேசுங்க அண்ணி’! வாசலில் இருந்து கெஞ்சும் கண்ணன்! மனம் இறங்குவாரா மூர்த்தி??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் தன் வீட்டிற்கு வந்து தனத்திடம் தன்னிடம் பேசும் படி கெஞ்சுகிறார். மேலும் மீனா மனசு கேக்காமல் யாருக்கும் தெரியாமல் கண்ணனிடம் வந்து பேசுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் வீட்டில் நிம்மதியே இல்லாமல் இருக்க அவரின் அம்மா அதை நினைத்தே கவலையில் உள்ளார். மேலும் லட்சுமி சரியாக சாப்பிடாமல் இருக்க மூர்த்தி வந்து சத்தம் போடுகிறார். இனி நம்ம வாழ்க்கையை தான் பாக்கணும்.

அவங்க அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுல பொழப்பு நடத்த வேண்டாமா?? என்று சொல்கிறார். தனமும் அனைவரையும் கடைக்கு அனுப்ப வாசலில் கண்ணன் வந்து நிற்பதை பார்த்து மூர்த்தி அதிரமடைகிறார். அண்ணா என்று அழைக்க வீட்டுக்குள்ளே சென்று கதவை சாற்றுகிறார்.

மேலும் கண்ணன் அண்ணி என் கூட பேசுங்க அண்ணி என்று சொல்கிறார். இதனை கேட்டு தனம் கண்கலங்குகிறார். மேலும் இதற்கு மேல் இதனை கேட்க கூடாது என்று காதை மூடிக்கொள்கிறார். கண்ணன் வெளியே இருந்து கத்தி கொண்டே உள்ளார். ஆனால் யாருமே அதனை காதில் வாங்கவில்லை, கதவையும் மூடி விடுகிறார்.

ஆனால் மீனா மனசு கேக்காமல் யாருக்கும் தெரியாமல் கண்ணனை வந்து பார்க்கிறார். ஏன் இப்படி பண்ண, உன்ன பார்த்தா பாவமா இருக்கு. ஆனால் என்னால உதவி பண்ண முடியாது என்று சொல்லி விடுகிறார். மீனா உள்ளே செல்ல மூர்த்தி கண்டுபிடித்து விடுகிறார்.

மேலும் நம் குடும்பத்தை விட உனக்கு அவன் தான் முக்கியமா?? என்று திட்டுகிறார். மேலும் மூர்த்தி வெளியில் கிளம்ப அப்பொழுது மீனா தனத்திடன் நீங்க தான் கண்ணன் மேல அவ்வளவு பாசமாக இருந்தீங்க, ஆனால் இப்போ நீங்களே அவனை வெறுக்குறீங்க என்று சொல்கிறார். மேலும் கண்ணனை வீட்டுல சேத்துக்க வேண்டாம். ஆனால் அவனுக்கு எதாவது உதவி செய்யலாம்ல என்று சொல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here