சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் அதிகரிப்பு – மக்கள் அதிர்ச்சி!!

0
சமையல் சிலிண்டர் வாங்குவதில் எழுந்த புதிய சிக்கல் - புது மாற்றத்தை அறிவித்த மத்திய அரசு!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து தற்போது ரூ.875.50 உயர்ந்துள்ளது. கடந்த 8 மாதங்களில் ரூ. 165 அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஒன்றரை மாதத்திற்கு பின் மீண்டும் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளன. அதாவது இதற்கு முன்பு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி 25 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. இதனால் பெரும் அளவில் நடுத்தர குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளாகின.

இந்நிலையில் மீண்டும் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை 875.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் மக்கள் போதுமான வருவாய் இன்றி, சிரமப்படும் வேளையில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு பெரிதும் பயன்படும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here