கோவிலுக்கு செல்லும் பாக்கிய லட்சுமியிடம் மாட்டிக் கொள்வாரா கோபி?? விறுவிறுப்புகளுடன் மகாசங்கமம்!!

0

இந்த வாரம் சிறப்பு ஒளிபரப்பாக பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸின் மகா சங்கமத்தில் இருவரது குடும்பங்களும் கோவிலுக்கு செல்கிறது. அங்கு வரும் கோபிநாத், ராதிகாவை பாக்கியலட்சுமி பார்ப்பாரா என நகர்கிறது கதைக்களம்.

பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடரின் மகா சங்கமத்தில், இன்றைய எபிசோடில் பாக்கியாவின் குடும்பத்தினர் குன்னக்குடி வந்துள்ளனர். அங்கு ஹோட்டலில் கோபிநாத் ரூம் புக் செய்து கொண்டிருக்க, பாக்கியலட்சுமி, வீட்டில் எல்லாரும் என்ன செய்கிறார்களோ என இனியாவிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

பின்பு, ராதிகாவிடம் வாங்கப்போகும் இடத்தை குறித்து வருத்தத்தில் இருக்கும் மூர்த்தியிடம், இந்த இடத்தை நாம தான் வாங்குவோம். வாங்கி டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்ஸ் கட்டி, அம்மா பெயரை வைக்கிறோம் என கதிர் மூர்த்தியை ஆறுதல்படுத்துகிறார். இடத்தை விற்கும் ஆபீசரிடம் இடத்தின் விலையை குறித்து மூர்த்தி, கதிர் மற்றும் ஜீவா பேசுகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குன்னக்குடி அம்மன் கோவிலிலிருந்து போன் வர தனம், முல்லை மற்றும் மீனாவிடம் நெய் குடுத்து கோவிலுக்கு அனுப்பி விடுகிறார். கயல் பாப்பாவை தூக்கிக்கொண்டு முல்லை மற்றும் மீனா கோவிலுக்கு கிளம்புகிறார்கள்.

அங்கு பாக்கியா கோபியை கோவிலுக்கு அழைத்து செல்ல கூறுகிறார். மறுக்கும் கோபி இனியா வருந்தி கூப்பிடும் போது எரிச்சலுடன் ஒத்துக்கொள்கிறார். ரூமுக்கு வெளியே சென்று, ராதிகாவிடம் தான் கிளம்பி வர கொஞ்சம் நேரமாகும் என போனில் பேசுகிறார் கோபி.

ஆஸ்கர் போட்டியில் இருந்து விலகிய ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் – சோகத்தில் ரசிகர்கள்!!

அந்நேரம் ரூமுக்கு வெளியே வரும் ராதிகாவை பார்த்து அதிர்ச்சியுடன் திரும்பவுமாக ரூமுக்குள் சென்று விடுகிறார் கோபி. பாக்கியா கோவிலுக்கு போகலாமா என கேட்க, அம்மாவிடம் பேசியதாக கூறிய கோபி, 10 நிமிடங்கள் கழித்து செல்லலாம் என பொய் சொல்லுகிறார். ஹோட்டலுக்கு வெளியே கோபியின் காரை பார்த்த ராதிகா அவருக்கு போன் செய்து பேசுகிறார்.

வீட்டில் தனம் கண்ணாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது தனத்தை பார்க்க ஜெகா வருகிறார். இடம் வாங்கப்போகும் விஷயத்தை ஜெகாவிடம் கூறுகிறார் தனம். பாக்கியலட்சுமி வீட்டில் ஜெனி தோசை சுட்டுக்கொண்டிருக்கிறார். அங்கு வந்த எழில், ஜெனிக்கு தோசை சுட உதவி செய்கிறேன் என கூறி அவரும் சொதப்பி விடுகிறார்.

திருட்டுத்தனமாக செழியனின் பர்ஸில் இருந்து பணம் எடுத்து சாப்பாடு வாங்கிவர கொடுக்கிறார் ஜெனி. கோவிலுக்கு செல்லும் பாக்கியாவின் குடும்பத்தினர் அவசர அவசரமாக சாமி கும்பிட்ட பிறகு, பாக்கியா கோபியிடம் பால்குடம் எடுக்க வேண்டும் என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here