விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் புதிய கட்டத்தை எட்டி உள்ளது. பல புதிய கதாபாத்திரங்களையும் அறிமுகமாகி உள்ளனர். மேலும் இன்றோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பாகி 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 1 முடிவடைந்ததும் ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஆரம்பத்தில் Promo மக்களை வெகுவாக ஈர்த்திருந்தது. ஏனெனில் தமிழ்நாட்டில் கூட்டு குடும்ப கதைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
சின்ன திரையில் மட்டுமல்ல வெள்ளித்திரைகளிலும் கூட ஆனந்தம், சமுத்திரம் போன்ற படங்கள் மெகா ஹிட் அடித்தனர். இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்படி தான். இது வரையிலும் நாம் பார்த்த சீரியலில் குடும்பத்தை கெடுப்பது, ஒருவருக்கு மட்டுமே கஷ்டம் ஏற்படுவது, அழுது கொண்டே இருப்பது போன்ற காட்சிகளை மட்டுமே சீரியலில் பார்த்து வந்த நமக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒரு மாறுபட்ட கதை அம்சமாக இருந்தது.
ஒரு கூட்டு குடும்பத்தில் ஏற்படும் எதார்த்த நிகழ்வுகள் கதையாக்கப்பட்டிருக்கும். இதில் ஸ்டாலின், சுஜிதா, சித்ரா, வெங்கட், ஹேமா, குமரன் போன்றோர் நடித்திருப்பர். மூத்த அண்ணியாக வரும் தனம் (சுஜிதா) தன் கணவரின் தம்பிகளுக்காக குழந்தை பெற்று கொள்ளாமல் வாழ்கிறார்.
மேலும் பலரிடம் குழந்தை இல்லாததற்கு அவமானமும் அடைகிறார். இதையும் தாண்டி ஜீவா கல்யாணத்தில் வரும் பிரச்சனையால் சித்ரா கதிரை திருமணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. காதலித்து திருமணம் செய்து கொள்ளும் மீனா, ஜீவா இடையே சின்ன சின்ன சண்டைகள் வந்து போகிறது.
மேலும் எதிர்பாராமல் திருமணம் செய்துகொள்ளும் கதிர் முல்லைக்கு நாளாக ஆக காதல் மலர்கிறது. தற்போது கதிர் முல்லைக்காகவே சீரியல் பார்ப்பவர்கள் ஏராளம். தற்போது முன்னணி சீரியலில் ஒன்றாகும் அளவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
2018, அக்டோபர் 1 இல் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முதன்முதலில் ஒளிபரப்பானது. இன்றோடு 2 வருடங்கள் முடிவடைகின்றன. ஆனால் நாளுக்கு நாள் இதன் ரசிகர்கள் அதிகரித்து கொண்டு தான் உள்ளனர். இவர்களின் இந்த வெற்றி பயணம் மேலும் தொடர வாழ்த்துவோம்.