பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள், வருகிற மார்ச் 31 க்குள் இணைக்க வேண்டும் எனவும், இல்லையெனில் இது எல்லாம் கேன்சல் ஆகிவிடும் என அரசு எச்சரித்துள்ளது.
அரசு வார்னிங் :
வருமான வரி கணக்கு எண்ணான பான் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதை ரூ.1000 அபராதத்துடன் செய்வதற்கான காலக்கெடு வருகிற மார்ச் 31ம் தேதிக்குள் நிறைவடையவுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது குறித்து, முக்கிய அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட்ட மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள 61 கோடி பான் அட்டைதாரர்களில், 48 கோடி வாடிக்கையாளர்கள் மட்டும் இதை செய்து முடித்துள்ளதாகவும், 13 கோடி பேர் இதை செய்யாமல் தவிர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வருமான வரி சட்டப்படி, ஆதாரை இணைக்காத பயனர்களின் பான் கார்டு ரத்து செய்யப்படும் எனவும், அப்படி நடந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது எனவும் எச்சரித்துள்ளது.
இலவச மகளிர் பேருந்து பயண திட்டம் ., போக்குவரத்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!!
இதுபோக நிலுவையில் உள்ள பணத்தை திரும்ப பெற முடியாது எனவும், பான் கார்டை மீண்டும் திரும்ப பெறுவது என்பது இயலாததாகிவிடும் எனவும் எச்சரித்துள்ளது. இதனால் பயனர்கள் விரைந்து இதனை முடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.