T20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய மகளிர் அணி இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பலப்பரீட்சை செய்ய உள்ளது.
T20 உலக கோப்பை:
மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரின் 8 வது சீசன் வரும் 10ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற உள்ளன. இதில், இந்திய அணியானது, இந்த உலக கோப்பைக்கு தயாராகும் வகையில், முன்கூட்டியே தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று முத்தரப்பு தொடரில் விளையாடியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த முத்தரப்பு தொடரில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தது. ஆனால், இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்த இந்திய அணி 2ம் இடம் பிடித்தது. இந்நிலையில், இந்த டி20 உலகக் கோப்பைக்காக சர்வதேச 10 அணிகளும் தலா 2 வார்ம்அப் போட்டிகளில் விளையாட உள்ளன.
ரோஹித் சர்மா கேப்டன்சிக்கு செக் வைத்த பிசிசிஐ…, அதை முறியடிப்பாரா??
இந்த வகையில், இந்திய மகளிர் அணியானது, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது. இந்த உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டிக்காக பாகிஸ்தான் அணியே வரும் 12ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், இந்திய அணிக்கு அட்வைஸ் அளிக்கும் விதமாக முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக உள்ளன. ஆனால், பில்டிங்கில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.