இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில், இன்று (அக்டோபர் 27) 26வது லீக் போட்டி அரங்கேறி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இமாம்-உல்-ஹக் 12 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பிறகு களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பிறகு ரிஸ்வான் 31 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
Enewz Tamil WhatsApp Channel
நிதானமாக விளையாடிய பாபர் அசாம் அரை சதம் அடித்து அசத்தினார். அடுத்து வந்த சவுத் ஷகீல் 52 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, இறுதியில் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர் முடிவில் 270 ரன்களுக்கு ஆல் ஆனது . தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் தப்ரைஸ் ஷம்சி 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.