கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் நடித்ததற்கு பிறகு சினிமாவில் இவரது மார்க்கெட் எகிற தொடங்கியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி திரையுலகில் புகழின் உச்சியில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர் குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஷாக் நியூஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது இவர் தனது அப்பா எடிட்டர் மோகனுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக இருந்த நிலையில் தற்போது அவரது மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்று விட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் இவர்கள், அடையாறில் பல கோடி மதிப்புள்ள பங்களாவில் வசித்து வருகின்றனர்.
இந்த பங்களா மைசூர் ராஜாவுக்கு சொந்தமானது குறிப்பிடத்தக்கது. அதாவது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் அம்மா கல்பனா மைசூர் ராஜாவின் 2வது மனைவியாம். அந்த வகையில் தன்னுடைய மனைவி கல்பனாவுக்கு மைசூர் ராஜா கொடுத்த பங்களாவில் தான் ஜெயம் ரவி தற்போது வசித்து வருகிறாராம். இப்படி ஜெயம் ரவி தனி குடித்தனம் சென்றதால் அவரது அப்பா மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருவதாக பயில்வான் கூறியுள்ளார்.