அதிகவிலை (Flagship) ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக குறைந்த விலையில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம்:
ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார். இந்திய சந்தைக்கு தனியாக பிரத்யேக திட்டங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒன்பிளஸ் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்ப்படுகிறது. இது ஒன்பிளஸ் Z சீரிஸ் வரிசைகளாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த முடிவு ஏற்கனவே இந்திய சந்தையில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் ரெட்மி, சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு இந்திய சந்தையில் நுழைந்த ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அன்றிலிருந்து ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவங்களின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு ஒன்பிளஸ் கடும் போட்டியாக உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |