திருச்சியில் உள்ள ஒரு கடையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வித்தியாசமான சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்
ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கேக் கடையில் வித்தியாசமான சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள நீதிமன்றம் அருகே ஹீபர் சாலையில் கேக் எக்ஸ்பிரஸ் என்ற கடை புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த கடையில் பலவிதமான கேக்குகள் தயாரிக்கப்பட்டு, 600 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த கடையில் ஒரு கிலோ கேக் வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதன்படி கேக் வாங்கும்போது கிடைக்கும் கூப்பனை கொண்டு குறிப்பிட்ட பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம். இச்சலுகை ஒருமாதம் வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவராஜ் சிங்க் சாதனையை சமன் செய்த பொல்லார்ட் – குவியும் வாழ்த்துக்கள்!!
இந்த அதிரடி அறிவிப்பு குறித்து பேக்கரி உரிமையாளர் சகாயராஜ் கூறும் போது, ‘வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மற்ற இலவசங்களை விட, ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பெட்ரோல் விலை அதிகரிப்பால் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு இது எளிதான வழியாக உள்ளது’ என கூறினார். முன்னதாக அந்த கடையில் ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு குடை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சலுகை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.