நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்த வண்ணம் உள்ளனர். மேலும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பஞ்சாப், ஜார்கண்ட் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் அரசு ஊழியர்கள் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். அதாவது நீண்ட நாட்களாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை வைத்துக் கொண்டே தான் உள்ளோம். ஆனால் தமிழக அரசு தற்போது வரை இதற்கு ஒரு முடிவு எடுக்கவில்லை. இனிமேலும் இதில் தமிழக அரசு காலதாமதம் செய்தால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.