தமிழ்நாடு அரசு துறைகளில் 6,151 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 2, 2A போட்டித் தேர்வு, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பித்து இருந்த தேர்வர்களுக்கு, முதல் நிலை தேர்வு முடிந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து TNPSC குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன்மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, முதல் கட்டமாக 161 காலியிடங்களுக்கான நேர்முக தேர்வு, கடந்த வாரம் நடத்தப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., செயலர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். மீதமுள்ள, 5,900 இடங்களுக்கான கவுன்சிலிங் விரைவில் நடத்தப்பட உள்ளது. அதேபோல் 2024 மார்ச் கடைசி வாரத்தில், குரூப் 2ஏ பதவிகளில் நேர்முக தேர்வு அல்லாத இடங்களுக்கான தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ODI கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி.. வெளியான நியூ அப்டேட்!!