ஓலா நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த, 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரே வாரத்தில் மொத்தமாக பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திடீர் பணி நீக்கம் :
உலகெங்கும் உள்ள ஐடி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோவிட் தொற்றுக்குப் பிறகு, பல நிறுவனங்கள் ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஓலா, தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் அளிக்கும் விதமாக முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஒரே வாரத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை மொத்தமாக பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது குறித்து பேசிய அந்த நிறுவன ஊழியர் ஒருவர், தொழில்நுட்ப குழுவில் பணிபுரிந்த நான் தற்போது வேலையை இழந்து வேறு வேலையை தேடி வருவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் ஓலா கேப்ஸ், எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் ரைட் ஹெயிலிங் போன்ற பல குழுக்களில் இருந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஓலா நிறுவனம் சமீப காலமாக மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால், இனி புதிதாக பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாகலாம் என நினைத்துக் கொண்டிருந்தபோது, திடீரென இந்த பணி நீக்கம் குறித்து அறிவித்திருப்பது ஐடி ஊழியர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.