டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி பலப்பரீட்சை செய்ய உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி இதை தான் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலக கோப்பை 2022:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்க உள்ளன. இந்த போட்டியில், சூப்பர் 12 சுற்றில் கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் கால் பதிக்கும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில், நியூசிலாந்து அணியானது, முதல் முறையாக டி20 உலக கோப்பையை ருசிக்க தயாராகி வருகிறது. இதே போல, பாகிஸ்தான் அணி கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு, உலக கோப்பையை அடைய முயற்சித்து மட்டுமே வருகிறது. இதனால், இரு அணிகளும் இறுதிப் போட்டியில் நுழைவதற்காக கடுமையாக போட்டி போட்டு கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி மகளிர் தரவரிசை வெளியீடு…, டாப் 10 ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீராங்கனைகள்!!
இந்த போட்டி நடைபெற இருக்கும் சிட்னி மைதானமானது, ஆரம்பத்தில் பேட்ஸ்மேன்களுக்கு அதிக சாதகமாக தரக்கூடும். போட்டி நகரும் வேளையில், பவுலர்களுக்கு அதிக பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.