இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காவல்துறை பல தண்டனைகள் கொடுத்த போதிலும் எதுவும் மாறிய பாடில்லை. அந்த வகையில் காதலித்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளாவை சேர்ந்த பக்ருதீன் என்ற 20 வயது பெண் சென்னையில் குரோம்பேட்டையில் மகளிர் விடுதியில் இருந்து கொண்டு மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் தனது காதலனான ஆசிக் என்பவருடன் தனியாக லாட்ஜ் எடுத்து தங்கியுள்ளார். மூன்று நாட்கள் ஆன நிலையில் பக்ருதீனை தேடிய தோழிகள் காவல் துறையிடம் தகவலை தெரிவித்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு காவல்துறை சென்று பார்த்த போது காதலியை கழுத்தை நெரித்து காதலன் கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து காதலனை கைது விசாரித்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று ஆசிக் ஒப்புக்கொண்டான். இதை தொடர்ந்து அவரை காவல்துறை சிறையில் அடைத்தனர்.