தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் டிசம்பர் 4ஆம் தேதி சென்னையை நோக்கி நகரக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது பருவமழை காலத்தில் பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் சென்னை மெட்ரோவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்க ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் பயணிகளுக்கு பயணத்தின் போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக 1860-425-1515 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.