கடந்த மாதம் நிறைவடைந்த ODI உலகக் கோப்பை தொடரின் தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா மீது அதிக விமர்சனம் எழுந்து வந்தன. ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று ரோகித் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் ஒப்பிட்டு கருத்துக்களை முன்வைத்து வந்தனர். தற்போது அந்த சர்ச்சை தொடர்பாக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்
அதில், இந்திய கிரிக்கெட்டை பார்க்கையில் மகேந்திர சிங் தோனி சிறந்த கேப்டன் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால், ரோஹித் சர்மா ஒரு சிறந்த நபர் என்று குறிப்பிட்டுள்ளார். ரோஹித் அணியின் ஒவ்வொரு வீரரையும் புரிந்து கொள்கிறார் என்றும், அவர்களுடைய விருப்பு வெறுப்புகளையும் அறிந்து கொள்கிறார் எனவும் கூறினார். மேலும் அவர் அனைத்து வீரர்களையும் தனிப்பட்ட முறையில் தெரிந்துகொள்ள முயற்சிப்பார் என கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு.., இதற்கு கவலை வேண்டாம்.., நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!