தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.
இவ்வளவு பேர் அதிகம்..!
தமிழக அரசு கொண்டு வந்த புதிய பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பொதுத்தேர்வு எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் – 9,44,569 பேர்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் – 8,26,082 பேர்
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் – 8,16,358 பேர்
5, 8ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து – அமைச்சர் அறிவிப்பு..!
இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ல் தொடங்கி ஏப்ரல் 13 வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 23,230 அதிகரித்து உள்ளது. மேலும் 12ம் வகுப்பில் 39,164 மாணவர்களும் கூடுதலாக தேர்வெழுத உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |