தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் (NPS) அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பலருக்கும் பென்ஷன் தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் தொகையை பகுதியளவு திரும்பப் பெறலாம் என ஓய்வூதிய நிதி மேம்பாட்டு ஆணையம் (PFRDA) அறிவித்துள்ளது. இருந்தாலும் ஊழியர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் NPS-ல் உறுப்பினராக இருக்க வேண்டும். மொத்த பங்களிப்பில் 25 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் போன்ற தகுதிகளை நிர்ணயித்துள்ளனர்.
NZ vs AUS 2024: கடைசி ஓவர் திரில்லர்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி!!
அப்படி இருக்கும் பட்சத்தில்,. கீழ்காணும் காரணங்களுக்காக பகுதியளவு எடுக்கலாம்:
- ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி தேவைக்காக எடுக்கலாம்.
- அவசரமான மருத்துவ உதவிக்காக எடுத்துக் கொள்ளலாம்.
- சொந்த தொழில் தொடங்குவதற்கான முதலீடாக எடுக்கலாம்.
- ஊழியர் அல்லது அவரது மனைவி பெயரில் வீடு வாங்குதல் அல்லது கட்டுவதற்காக திரும்பப் பெறலாம்.