நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் LPG சிலிண்டர் வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து மாநிலங்களிலும் இனி வரும் நாட்களில் LPG சிலிண்டர் வாங்குவதற்கு ஆதார் கார்டை அந்தந்த நிறுவனங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதைத்தொடர்ந்து உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களும் KYC ஆவண சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில் சில மாநிலங்களில் இந்த பணிகளை இன்னும் சில தினங்களில் முடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு இனி வரும் நாட்களில் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் இந்த பணியை முடிக்காதவர்கள் விரைந்து முடிக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.