புலம்பெயர் தொழிலாளர்கள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி., தொழில்துறை அமைச்சர் திடீர் நடவடிக்கை!!

0
புலம்பெயர் தொழிலாளர்கள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி., தொழில்துறை அமைச்சர் திடீர் நடவடிக்கை!!
புலம்பெயர் தொழிலாளர்கள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி., தொழில்துறை அமைச்சர் திடீர் நடவடிக்கை!!

தமிழகத்தில் வேலை பார்த்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக, பீகார் ஆய்வுக்குழு தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை தகவல் :

தமிழகத்தில் உள்ள வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த சர்ச்சை சமீப நாட்களாக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய தொழில்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தமிழகத்தில் தற்போது வரை 6 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இங்கு வரும் அனைத்து தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் தலைமையிலான குழு சேகரித்து வருகிறது. இதனால் தேவையற்ற வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வடமாநில தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்ய வந்த பீகார் மாநில ஆய்வுக்குழு, இங்கு தொழிலாளர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என அறிக்கை தந்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு புதிய கெடுபிடி., இது இல்லாம இனி அந்த பக்கம் கூட போக முடியாது! அரசு திட்டவட்டம்!!

தமிழக அரசும், இங்குள்ள நிறுவனங்களும் தொடர்ந்து அவர்களை பாதுகாத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இந்த திடீர் நடவடிக்கையால், புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here