தமிழகத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரண உதவித்தொகை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் மிக்ஜம் புயலைத் தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் பெய்த கனமழையால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் சென்னை மாவட்டங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை போலவே தென் மாவட்டங்களிலும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து தமிழக அரசு தென் மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை அறிவித்தது. ஆனால் இப்போது தென் மாவட்ட மக்கள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதாவது சென்னை போன்ற மாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. எனவே நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.