சபரிமலை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி/., இந்த அருவிகளில் குளிக்க அனுமதி!!!

0
சபரிமலை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி., இந்த அருவிகளில் குளிக்க அனுமதி!!!

கடந்த சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குற்றால நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால் குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், சுற்றுலா பயணிகள், ஐயப்பமார்களுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

தற்போது மழைப்பொழிவு சீராகி வருவதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து ஐந்து நாட்களுக்கு பிறகு இன்று (டிச.23) குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாலை முதலே ஐயப்பமார்கள் பலரும் குளிப்பதற்காக அருவிக்கரையில் குவிந்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

நாங்களே வீட்டை விட்டு வெளியே போறோம்.., முத்து-மீனா எடுத்த அதிரடி முடிவு.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here