தைத்திங்கள் முதல் நாள் தமிழர்கள் அனைவராலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து மாட்டு பொங்கல், திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுவதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவர் தினத்தன்று மக்கள் அனைவரும் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் பகுதிகளில் கூடி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்கள்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அவர்களின் பாதுகாப்புக்காக சென்னை காவல்துறை பல ஆயிரம் காவல்துறை அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த உள்ளனர். மேலும் சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக போக்குவரத்து துறை பல சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளனர்.
இது என்ன எலான் மஸ்க்கு வந்த சோதனை.., சொத்து மதிப்பை இழந்ததால் கிடைத்த கின்னஸ் சாதனை!!!
இந்த நிலையில் தற்போது ஜனவரி 16 அன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள மதுபான கடைகள், நட்சத்திர விடுதிகளில் உள்ள பார்களில் மது விற்பனை தடை செய்யப்படும் என அறிவித்துள்ளனர். இதை மீறுபவர்கள் மீது கலால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.