தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் களமிறங்கப்படுவதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த நிலையில் நேற்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நான் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் போதிய பணம் இல்லை. எனது சம்பளம், சேமிப்பு எல்லாம் இந்தியாவிற்கான நிதியல்ல,என்னுடையது தான்.” என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.