தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க இருக்கும் நிலையில் ஆங்காங்கே இருக்கும் சில முக்கிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய போகும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே அடுத்த 3 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, திருப்பத்தூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜாக்பாட்., இனி வேலையெல்லாம் ஈஸியா கிடைக்கும்!!!