திருமண பந்தலிலேயே பெண்ணுக்கு நடந்த இறுதி சடங்கு – தெலுங்கானாவில் நெஞ்சை உலுக்கும் சோகம்!!!

0

தெலுங்கானா மாநிலத்தில் திருமணமான ஓரிரு வாரங்களிலேயே மணப்பெண் இருவரும் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மாப்பிள்ளை வீட்டாருக்கு மட்டுமல்ல மணமக்களுக்கு விருந்து வைத்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவாணி. இவருக்கு வயது 19. இவருக்கும் தண்டூர் கிராமத்தை சேர்ந்த நவீன் என்பவருக்கும் மே 21 ஆம் தேதி வெகுவிமர்சையாக திருமணம் நடைபெற்றது.விருந்திற்காக உறவினர் வீடுகளுக்கும் சென்ற புதுமண தம்பதி கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் அங்குள்ள கோவில் ஒன்றுக்கு சென்று விட்டு  வீடு திரும்பி உள்ளனர். அப்போது புது மணப்பெண் ஸ்ரீவாணி திடீரென மயக்கம் அடைந்துள்ளார்.

இதனால் அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவாணி சிறுது நேரத்தில் மிகவும் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணப் பந்தலை கழற்றும் முன்பாகவே அதே பந்தலில் ஸ்ரீவாணிக்கு இறுதி சடங்கும் செய்யப்பட்டது. இதேபோன்று மற்றொரு சம்பவம் அதே தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. அம்மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், விஜயா இருவருக்கும் சென்ற மாத இறுதியில் திருமணம் நடந்தது.

இவர்களும் வழக்கம் போல உறவினர்கள் வீட்டிற்கு விருந்துக்கு சென்று வந்துள்ளனர். தற்போது விஜயாவும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். திருமண விழாக்களை நடத்த அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இருந்தால் இதுபோன்ற இறப்புகள் ஏற்படாமல் தவிர்த்து இருக்கலாம். மக்கள் அனைவரும் இது போன்ற கடினமான சூழலில் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here