நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்நாட்டு அரசு ஒட்டு மொத்த நியூசிலாந்திற்கே 3 நாட்களுக்கு ஊரடங்கு போட்டுள்ளது.
இரண்டாம் அலையில் உலக மக்கள் கொத்து கொத்தாக பலியான வேளையில் மிக சிறப்பாக செயல்பட்டு கொரோனா தொற்றை ஒழித்த நாடுகளில் முதலிடம் பிடிப்பது நியூசிலாந்து. தற்போது வரை அங்கு 26 பேர் மட்டுமே கொரோனவால் உயிர் இழந்துள்ளனர்.
குறிப்பாக அங்கு கடந்த 6 மாதங்களில் எவ்வித தொற்றும் பதிவாகவில்லை. 50 லட்சம் மக்கள் தொகையை கொண்ட அந்த நாடு கொரோனவை கையாண்ட விதம் பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் ஆக்லாந்து நகரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டு அரசு மூன்று நாட்கள் நாடு தழுவிய முழு ஊரடங்கை அறிவித்து உள்ளது. அதே சமயம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்