பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எழில் வீட்டில் அனைத்து வேலைகளையும் பார்த்து கொண்டிருக்க கோபி ராதிகாவை பார்ப்பதற்காக பார்க் செல்கிறார். இதனை ராஜேஷ் போட்டோ எடுத்து விடுகிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் உடல்நிலையை பொருட்படுத்தாமல் வீட்டில் உள்ள அனைவரும் வேலை வாங்கிக்கொண்டிருக்க ஜெனியும், எழிலும் தான் பக்கபலமாக இருந்து வருகின்றனர். எழில் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.
மேலும் சமைத்தும் வைக்க ஜெனி அவருக்கு உதவியும் செய்கிறார். ஈஸ்வரி எழிலின் சமையலை பாராட்டிக்கொண்டே சாப்பிடுகிறார். அம்மாவிற்காக மாடிக்கு சாப்பாடை எடுத்து செல்கிறார் எழில். அப்பொழுது ப்ரொடியூசரிடம் இருந்து எழிலுக்கு கால் வர பாக்கியாவை சாப்பிட வைத்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
அப்பொழுது ஈஸ்வரி எழிலின் சட்டையில் கரை இருப்பதை பார்த்து ஷாக்காகிறார். இந்த பாக்கியா என்ன வேலை பார்த்து வச்சு இருக்கா?? நின்னு துணிய போடுறதுல என்ன கஷ்டம் என்று சொல்கிறார்.
பாக்கியாவும் ஈஸ்வரி கத்தியதில் கீழே வருகிறார். என்ன எழில் வந்ததும் சொகுசா இந்துக்கலாம்னு நெனச்சுட்டியா, பாத்துக்க ஆளு இருந்ததும் நடிக்க ஆரம்பிச்சிட்டியா?? நேத்துல நல்லா தானே இருந்த என்று சொல்ல பாக்கியாவிற்கு கண்ணீர் வருகிறது. சட்டையில் இருக்கும் கரையை அவரே துவைக்கிறார்.
அடுத்ததாக கோபி ராதிகாவிற்காக பார்க்கில் காத்துக்கொண்டுள்ளார். அப்பொழுது ராதிகா அங்கே வர இருவரும் கையை பிடித்துக்கொண்டு பேசிகொண்டுள்ளனர். கோபி ராதிகாவிடம் பாக்கியாவை பற்றிய தவறாக பேச ஆரம்பிக்கிறார்.
தனக்கு சமைத்தும் கொடுக்கமாட்டாள், என்னைபற்றிய அக்கறையே கிடையாது, யாருமே இல்லாதவன் போல இருக்கிறேன், அதனால் தான் உன்னையும் மயூவையும் மிஸ் செய்கிறேன் என்று சொல்கிறார். இதனால் ராதிகா தனக்கு சமைத்து கொடுக்கும் டீச்சரை உங்களுக்கும் சமைக்க சொல்லவா?? என்று கேட்கிறார்.
அதற்கு தன் மனைவி கோவப்படுவாள் என்று சொல்கிறார். இவர்கள் இருவரும் இணைத்து இருப்பதை ராஜேஷ் பார்த்து விடுகிறார். அதனை போட்டோவும் எடுத்து விடுகிறார்.இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்