விஜய் டிவியில் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். தற்போது இந்த சீரியலில் மாறன் மற்றும் மாயனின் சந்திப்பு நிகழ்கிறது. அதன் பின்னர் மாயன் தனது கோவத்தை மாறனிடம் காட்டுகிறார்.
நாம் இருவர் நமக்கு இருவர்
நாச்சியார் மாயன் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார். இதனால் வேறு வீடு தேடி அவர்களை கூட்டி செல்ல வருகிறார் மாயன். அப்பொழுது மாயன் வீட்டிற்கு வெளியே நிற்கும் அவரின் குடும்பத்தை நோக்கி கிளம்பும் படி சொல்கிறார். சாராதா மாயனின் அம்மா 25 வருடத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய கதையை மாயனிடம் கூறி, மாயனின் அம்மா மற்றும் அவரின் தம்பி மாறன் வந்திருப்பதாக கூறுகிறார். அதை தொடர்ந்து மாறன் அடியாளுகளை அடித்த விஷயத்தை வியப்புடன் மாயனின் தங்கைகள் கூறுகின்றனர்.
அதன் பின்னர் கத்தி மாயனிடம் அவர்களை சென்று பார்க்குமாறு கூற, என்னை தனியாக விட்டு சென்றவர்களை நான் ஏன் பார்க்க வேண்டும் என்று கேட்கிறார் மாயன். இதனை கேட்டுக்கொண்டிருந்த காயத்ரி மாயனுக்கு கோபத்தை விட சொந்தம் தான் முக்கியம் என சொல்லி அனைவரும் மாயனை சமாளித்து அவரின் அம்மாவை பார்க்க சொல்கிறார்கள். சமாதாமான மாயன், அம்மா என அழைத்தபடி உள்ளே செல்கிறார்.
அச்சு அசலாக தன்னை போல இருக்கும் மாயனை பார்த்து கட்டி தழுவுகிறார். அதன் பிறகு இருவரும் தங்களை பற்றி பேசிக் கொள்கின்றனர். அப்பொழுது இந்த பூனை கண்ண வச்சு தான என் அம்மாவை மயக்கி என்கிட்ட இருந்து கூட்டிட்டு போன, எனக்கு ஓ மேல எவ்வளவு கோபம் இருக்குனு தெரியுமா என மாயன் கேட்க மாறன் சிரிக்கிறார்.அதன் பின்னர் மாறன் தனது கஷ்டத்தை கூறுகிறார்.
அதாவது வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஒரு வேலை சோற்றுக்காக அவ்வளவு கஷ்டப்பட்டதாகவும், அதற்கு பின்னர் கடுமையாக உழைத்து எந்த மண்ணை விட்டு நிர்கதியாக வெளியே வந்தோம்மோ அந்த மண்ணில் ஒரு பெரிய ஆளாக உள்நுழைய வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்ததாக மிக உருக்கமாக மாறன் தனது கஷ்டத்தை கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்