சின்னத்திரை நட்சத்திரமான ஜனனி அசோக்குமார் விஜய் டிவியின் மாப்பிள்ளை, ஆயுத எழுத்து, மௌன ராகம் போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் ஜீ தமிழின் ப்ரைம் டைம் சீரியலாக இருந்த செம்பருத்தி சீரியலின் கௌரவ கதாபாத்திரமான ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். பிறகு இயக்குனர் ஜெகதீசன் இயக்கத்தில் நண்பேன்டா படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பிறகு மீண்டும் விஜய் டிவியில் மற்றொரு சீரியல் ஆன “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் கமிட்டாகி ஹீரோவுக்கு தங்கையாக நடித்து வந்த நிலையில் தற்போது அந்த சீரியலும் இறுதியில் கட்டத்தை எட்டி முடிவடைந்துவிட்டது. இதனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இவருக்கு 1 மில்லியன் சப்ஸ்கிரைபர் இருந்து வருகின்றனர்.
குறுகிய காலத்தில் மில்லியன் யூசர்ஸை தொட்டது இந்த சைட் தான்.., வெளியான முழு பட்டியல்!!
ரீசெண்டாக ஜனனி அசோக்குமார் தனது பிறந்தநாளை தன் சீரியல் நண்பர்களுடன் கொண்டாடி அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுவரை எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்த ஜனனி தற்போது ஒரு புதிய சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை கண்ட ஜனனியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.