சண்டே என்றாலே அனைவரின் மனதிலும் வரும் ஒரே எண்ணம் அசைவ உணவு தான். இதில் பலரின் விருப்ப உணவாக இருப்பது மட்டன் அல்லது மீன். மட்டன் கறி அனைவருக்கும் பிடிக்கும் ஆனால் அதை கடித்து சாப்பிட சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். அவர்களுக்கு என்று வந்தது தான் மட்டன் கீமா. அதில் கோலா உருண்டை செய்து இருப்போம். ஆனால் இப்படி ஒரு குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்க.
தேவையான பொருட்கள்
மட்டன் கீமா – 300 கிராம்
கிராம்பு – 2
பட்டை – 1
ஏலக்காய் – 2
அண்ணாச்சி பூ – 1
இஞ்சி – 1 தேக்கரண்டி
பூண்டு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் – 2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
புதினா – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கிராம்பு, பட்டை, ஏலக்காய், அண்ணாச்சி பூ போட்டு நன்றாக வதங்கி கொள்ளவும். அதன் பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை நன்கு வதக்க வேண்டும். அதன் பிறகு தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் மற்றும் தக்காளியும் ஒன்றோடு ஒன்று நன்கு கலந்து பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகு தூள், புதினா மற்றும் மட்டன் கீமா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும். இதையடுத்து தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு மூடி வைத்து கொள்ள வேண்டும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். தற்போது சுவையான வீடே மணக்கும் கொத்துக்கறி குழம்பு ரெடி.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்