தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்பட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் கனமழையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.
மேலும் நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மற்றும் கடலோர கர்நாடக பகுதிகளில், லட்சத்தீவு பகுதிகளில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை பலத்த வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்