தமிழகத்தில் பெருகிவரும் வாகன நெரிசலையும், சாலை விபத்துகளையும் தடுக்க காவல் அதிகாரிகள் பல்வேறு விதிமுறைகளை நடைமுறை படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் இருசக்கர வாகனம் 50 கிலோமீட்டர் வேகத்திலும், கார் 60 கிலோமீட்டர் வேகத்திலும், ஆட்டோ 40 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் வேக கட்டுப்பாட்டை அறிவித்தனர்.
அதன்படி நேற்று இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில் இதை மீறுவோர் மீது அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று ஒரு நாள் மட்டும் வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணித்தவர்களிடம் ரூபாய் 2 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாகவும், 231 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.