என்னது.., 25 பைசாவிற்கு பட்டுப்புடவை இலவசமா? திண்டுக்கல்லில் திரண்ட பொதுமக்கள்!!

0
என்னது.., 25 பைசாவிற்கு பட்டுப்புடவை இலவசமா? திண்டுக்கல்லில் திரண்ட பொதுமக்கள்!!
என்னது.., 25 பைசாவிற்கு பட்டுப்புடவை இலவசமா? திண்டுக்கல்லில் திரண்ட பொதுமக்கள்!!

தற்போதைய காலகட்டத்தில் புதிதாக கடைகளை திறக்கும் உரிமையாளர்கள் மக்களை கவரும் விதமாக பல ஆஃபர்களை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக திறந்த துணிக்கடை உரிமையாளர் கொஞ்சம் வித்தியாசமான முறையில் ஆஃபர் கொடுத்துள்ளார். அதாவது திண்டுக்கல் நாகல் நகரில் புதிதாக ஒரு துணிக்கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் கடை திறப்பு விழா அன்று பழைய 25 பைசா நாணயம் முதலில் கொண்டு வரக்கூடிய 500 பொது மக்களுக்கு பட்டுப்புடவை இலவசமாக கொடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர். அவர்கள் கூறியது போல் இன்று முதலில் பழைய 25 பைசா நாணயத்தை கொண்டு வந்த 500 பேருக்கு புடவை வழங்கினர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. காலை 8 மணிக்கு பட்டுப்புடவையை கொடுக்க ஆரம்பித்து 10 மணிக்கு புடவையை கொடுத்து முடித்தனர்.

ராக் ஸ்டாரை டீலில் விட்ட சூப்பர் ஸ்டார்.., அனிருத்துக்கு பெரிய சர்பரைஸ் கொடுத்த நடிகர் விஜய்.., இது தான் தளபதி ஸ்டைல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here