உலகநாயகன் மற்றும் ரஜினிகாந்த் குறித்து பிரபல செய்தியாளர் முக்தர் என்பவர் பேசியது இணையத்தில் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் – ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களாக ஜொலித்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகர் ரஜினிகாந்த் – கமல்ஹாசன். தற்போது இவர்கள் இந்தியன் 2 மற்றும் ஜெயிலர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்கள். மேலும் இரண்டு பெரும் கட்சி தொடங்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டனர். அதன் பின்னர் ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நிலை குறைவால் அவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து வாபஸ் பெற்றார். ஆனால் கமல் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை தொடங்கி தலைவராக செயல்பட்டு வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் நடிப்பு ஒரு பக்கம் அரசியல் ஒரு பக்கம் என கமல் பிஸியாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தேர்தல் நெருங்கி வருவதால் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் உலக நாயகனை குறித்து பிரபல செய்தியாளர் முக்தர் பேசியது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அதாவது நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஐயய்ய.., தொப்பை போட்டு இப்படி இருக்கீங்க அமலா பால்.., அதுவும் இவளோ டைட்டான டிரஸ்ல!!
அரசியலில் தன்னுடைய மானத்தை காப்பாற்ற தனது ரசிகர்களை அடகு வைக்கிறார் கமல்ஹாசன். இவரை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது ரஜினி எவ்வளவோ மேல் என்று மேடையில் பேசியுள்ளார். ஏனென்றால் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறி அதன் பின்னர் தனது ரசிகர்களை மனதில் வைத்து அவர்கள் தலையில் பாரத்தை திணிக்க வேண்டாம் என்று அவரே விலகிட்டார் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி நட்சத்திரங்கள் யாரும் ரசிகர்கள் மூலம் ஆதாயம் தேடாதீர்கள் என்று கூறியுள்ளார்.