வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம், விரைவில் தொடங்கப்படும் என சத்தீஸ்கர் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு :
தமிழகத்தில் வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு அரசின் சார்பாக, அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப உதவி தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேந்திர பாகல் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, மாநிலத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு, உதவித்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். விரைவில் இது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இளைஞர்களின் கல்வித் தகுதி வாரியாக இந்த உதவித்தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ஆண்டுக்கான பத்ம விருதுகள்.., தென்னிந்தியாவை சேர்ந்த வாணி ஜெயராம், கீரவாணி தேர்வு!!!!
மாநில அரசின் இந்த புதிய திட்டத்திற்கு அரசியல் வட்டாரத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.