தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இந்த சலுகைகளை பெறுவதற்கு பலரும் புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை 8000 மேற்பட்ட புது ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை இவர்களுக்கு இன்னும் புது கார்டு வழங்கப்படவில்லை. அதற்கு காரணம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றது.
இதனால் புது ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் புது ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கூடிய விரைவில் எம்பி தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வேலை தேர்தல் அறிவிப்பு வெளியானால் நிச்சயம் புது ரேஷன் கார்டுகளை விநியோகம் செய்ய முடியாது. இதனால் புது ரேஷன் கார்டு வழங்க இன்னும் ஆறு மாதங்களுக்கு மேலாகலாம் என்ற ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.