நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சந்தித்து பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் புது ரேஷன் கார்டுகள் எப்போது கிடைக்கும்? அறிவிப்பு வெளியீடு.., முழு விவரம் இதோ!!!
இந்த சூழலில் கடந்த 2019ஆம் ஆண்டை போல, இம்முறையும் மதுரை சித்திரை திருவிழா நடைபெறும் போது, மக்களவை தேர்தல் வாக்குப் பதிவை நடத்தக்கூடாது என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அரசிடம் முறையிட்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற இத்திருவிழாவில் மதுரை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரங்களில் இருந்தும் எண்ணற்றவர்கள் கலந்து கொள்வார்கள்.
இதனால் திருவிழா தேதிகளில் தேர்தல் நடைபெற்றால், வாக்குப்பதிவு குறைவாக வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையத்துக்கு முன்கூட்டியே, தமிழக அரசு தகவல் தெரிவிக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.