மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்தாண்டை போல, நடப்பாண்டிலும் 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு குறித்த அறிவிப்பை, அடுத்த மார்ச் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சித்திரை திருவிழா: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இந்த தேதியிலா? மதுரை மக்கள் கோரிக்கை!!!
அப்படி அறிவிக்கும் பட்சத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயரும் என்பதால், ஊதியங்களிலும் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என நம்பப்படுகிறது. எனவே இந்த அறிவிப்பை எதிர்நோக்கி ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் காத்திருக்கின்றனர்.