861 கோடி ரூபாயில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் – பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!!

0

டெல்லியில் புதிய நாடாளுமன்றத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா வருகிற டிசம்பர் 10-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்கவுள்ளது.

புதிய நாடாளுமன்றம்:

டெல்லியில் உள்ள சன்சாத் மார்க்கில் ரூ.861 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா வருகிற டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளது.தற்சார்பு இந்தியா லட்சியத்தின் முக்கிய பகுதியான இந்த புதிய கட்டிடம், சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக மக்களின் நாடாளுமன்றத்தை கட்டுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பாகவுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, “பழைய கட்டிடத்தில் இருந்து சுதந்திர இந்தியாவின் பயணம் தொடங்கியது. 75-வது சுதந்திர தின விழாவை நிறைவு செய்யும்போது, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளின் அமர்வையும் நாங்கள் பெறுவோம். இந்த நாடாளுமன்றம், வெறும் செங்கல் மற்றும் கற்களால் கட்டப்பட்ட கட்டிடம் இல்லை. இது,130 கோடி மக்கள் கனவுகளின் ஒரு முழுமை ” என்று தெரிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டும் பணி டாடா லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.2019 அக்டோபரில், டாக்டர் பிமல் படேல் தலைமையிலான குஜராத்தை தலைமையிடமாகக் கொண்ட எச்.சி.பி டிசைன், பிளானிங் & மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் இத்திட்டத்தை வடிவமைத்தது.64,500 சதுர மீட்டர் பரப்பளவில் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் வர உள்ளது.

மொத்த செலவு 861 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டிடத்தில் 6 நுழைவாயில்கள் இருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான சிறப்பு நுழைவு வாயில் இருக்கும். மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பிரத்யேக நுழைவு வாயில் இருக்கும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மற்றொரு நுழைவு, மேலும் இரண்டு பொது நுழைவுவாயில்கள் இருக்கும்.

கட்டுமான குழியில் விழுந்து 6 வயது சிறுவன் பலி – தேனியில் சோகம்!!

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நான்கு தளங்கள் இருக்கும். நாடாளுமன்றக் குழு, நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் அலுவலகங்கள், மக்களவை செயலகம், மாநிலங்களவை செயலகம், பிரதமர் அலுவலம், ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கான அலுவலகம் உட்பட மொத்தம் 120 அலுவலக இடங்கள் இடம்பெறும். 3,015 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய மக்களவை கட்டிடத்தில் 888 உறுப்பினர்கள் அமர ஏற்பாடு செய்யப்படுகிறது.

தற்போதைய மக்களவை 1,145 சதுர மீட்டர் பரப்பளவில், வெறும் 543 உறுப்பினர்கள் அமர வழி வகுக்கிறது.3,220 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய மாநிலங்களவை கட்டிடத்தில் 384 உறுப்பினர்கள் அமர ஏற்பாடு செய்யப்படுகிறது. தற்போதைய மாநிலங்களவை 1,232 சதுர மீட்டர் பரப்பளவில், வெறும் 245 உறுப்பினர்கள் அமர வழி வகுக்கிறது.

இரு அவைகளின் கூட்டு அமர்வின் போது, புதிய மக்களவை கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 1,224 உறுப்பினர்களை தங்க வைக்கும்.அருகிலுள்ள கட்டிடம், ஷ்ரம் சக்தி பவனின் தளத்தில் வரும், அனைத்து எம்.பி.க்களுக்கும் அறைகள் இருக்கும், மேலும் அது ஒரு அண்டர்பாஸ் வழியாக இணைக்கப்படும்.நில நடுக்கத்தை தாங்கும் வலிமையுடனும், நெருப்பை எதிர்த்து போராடும் வசதிகளுடன் இந்த கட்டிடம் உருவாக்கப்படுகிறது. மேலும், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும்.

புதிய நாடாளுமன்றம் குறித்து, மூத்த அதிகாரி கூறுகையில், “இது அதிநவீன ஒலியியல் மற்றும் மூன்று கோபுரங்களைக் கொண்ட ஒரு முக்கோண நாடாளுமன்றமாக இருக்கும். இது ஜனநாயகத்தின் உணர்வை பிரதிபலிக்கும். இந்த புதிய நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு சாளரமும் இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் தனித்துவமாக இருக்கும். புதிய நாடாளுமன்றத்திற்குள் 75 வது ஆண்டு அமர்வு (2022) நடக்க வேண்டும் என்பதே குறிக்கோள்.” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here