இந்தியாவில் மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்?? மத்திய அரசு ஆலோசனை!!

0

நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து நாளை மத்திய அரசு, மாநில அரசு சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளது.

தீவிரமாகும் கொரோனா:

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை மிக அதிகமாக காணப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டை விட தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த 2 நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டி வருகிறது. மேலும் கொரோனவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து ஆயிரத்தை தாண்டி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அனைத்து மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு போன்ற தடுப்பு நடவடிக்கைகளும் அமலில் இருந்து வருகிறது. தற்போது நாட்டில் மிக அதிக அளவில் தடுப்பூசி, பரிசோதனை போன்ற வேலைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் இருந்து வெளியேறும் சிட்டி பேங்க் – வாடிக்கையாளர்களின் நிலை??

இந்நிலையில் தற்போது நாட்டில் மிக வேகமாக கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதால் இதை தடுப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாளை மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் இந்தியாவில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here