பாக்கியவிடம் பேச துடிக்கும் இனியா, விலகி போகும் பாக்கியா – பாச போராட்டங்களுடன் “பாக்கியலட்சுமி” சீரியல்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று கோபி ராதிகாவை சந்திக்க செல்கிறார். கோபி இனியா குறித்து மிகவும் வருத்தத்துடன் கூறுகிறார். அதே போல் ராதிகா தான் வீடு மாறியதற்கான காரணத்தை கூறுகிறார்.

“பாக்கியலட்சுமி” சீரியல்

இன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி ராதிகாவை நேரில் சென்று பார்க்கிறார். ராதிகா தனது புதிய வீட்டில் இருப்பதை பார்த்து அது குறித்து கேட்கிறார். ராஜேஷ் தான் தங்கி இருக்கும் வீட்டிற்கு அடிக்கடி வந்து தன்னை பற்றி தவறாக கூறி வருவதாக கூறி வருந்துகிறார். இதனால் மயூரி மிகவும் நொந்து போனதால் தான் புது வீட்டிற்கு மாறி வந்ததாக கூறுகிறார். பின், கோபியும் இனியா செய்ததை குறித்து கேட்கிறார். இனியா செய்ததை கேட்டு ராதிகாவிற்கு கோபம் வந்து விடுகிறது.

இந்தியாவில் மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்?? மத்திய அரசு ஆலோசனை!!

பின், கோபியை குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ளும்படி கூறுகிறார். பின், எழில் வீட்டிற்கு வந்து ஆன்லைன் ஆர்டர் கிடைத்து விட்டது என்றும் அதற்கு பணம் கட்ட வேண்டும் என்றும் கூறுகிறார். இதனால் சோகம் அடைந்து விடும் பாக்கியா தன்னால் இனி பிசினஸ் செய்ய முடியாது என்று கூறுகிறார்.

எழில் தனது அம்மாவிற்கு மிகவும் உற்சாகம் அளிப்பது போல பேசுகிறார். பாக்கியா மீண்டும் பிசினஸ் தொடங்க போவதில்லை என்று திட்டவட்டமாக கூறி விடுகிறார். பின், இனியாவை பள்ளியில் இருந்து அழைத்து வர பாக்கிய செல்கிறார். அப்போது இனியா தனது அம்மாவிடம் பேச பலவாறாக முயற்சி எடுக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், பாக்கியா இனியாவிடம் பேசுவதை தவிர்க்கிறார். இரவு வீட்டில் இருக்கும் அனைவரும் இனியாவை பள்ளியில் என்ன நடந்தது என்று கேட்கின்றனர். இனியாவும் பதில் சொல்லி கொண்டு இருக்கும் போது, பாக்கியா கோபியிடம் வந்து தான் மீண்டும் பிசினஸ் செய்ய இருப்பதாக கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here